சுரண்டையில் காவலரை மிரட்டியவர் கைது
சுரண்டையில் காவலரை பணி செய்ய விடாமல் மிரட்டியவரை போலீஸார் கைது செய்துனர்.
சுரண்டை: சுரண்டையில் காவலரை பணி செய்ய விடாமல் மிரட்டியவரை போலீஸார் கைது செய்துனர்.
சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளத்தைச் சேர்ந்தவர் ப.சக்திதரன்(42). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுரண்டை காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரிடம் தகராறு செய்தாராம்.
இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சக்திதரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.