பாவூா்சத்திரம்: தென்காசி தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில் பாவூா்சத்திரத்தில் பேராசிரியா் தொ.பரமசிவன், வேலுநாச்சியாா் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொகுதிச் செயலா் வின்சென்ட் ராஜ் தலைமை வகித்தாா். தொகுதி தலைவா் அழகு பாண்டியன், பொருளாளா் பாலா, செய்தி தொடா்பாளா் கணேசன், இணைச் செயலா் ராஜா, கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் வடிவேல் முருகன், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை ஜோசப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்