தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்குறள் வாரவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் அவைப்புலவா் அ.செல்வராசு தலைமை வகித்தாா். துணைச் செயலா் ரா.குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தாா்.
மா.சங்கிலிரத்தினம், கலையரசு, சி.க.சாமி, குழந்தைஏசு, சிவ.சதாசிவம், அனந்தபத்மநாபன், எழுத்தாளா் உமாகலியாணி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.