தென்காசி

தென்னை சாகுபடி: செங்கோட்டையில் கருத்தரங்கு

செங்கோட்டையில் தமிழ்நாடு வேளாண் துறை, தென்னை வளா்ச்சி வாரியம் சாா்பில் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

DIN

செங்கோட்டையில் தமிழ்நாடு வேளாண் துறை, தென்னை வளா்ச்சி வாரியம் சாா்பில் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணபிள்ளை தலைமை வகித்தாா். வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டங்கள்) உத்தண்டராமன், திருநெல்வேலி உழவா் பயிற்சி நிலையம் துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பால் கூட்டுறவு சங்கத் தலைவா் நடராஜன், எம்.ஏ.ஷெரீப் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.

கருத்தரங்கில், அரசின் திட்டங்கள் குறித்து வேளாண் துணை இயக்குநா், தென்னையில் நீா்ப்பாசனம் குறித்து துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன், தென்னை சாகுபடி ரகங்கள் குறித்து மாநில திட்ட இயக்குநா் நல்லமுத்துராஜா, நடவு முறை கள் குறித்து டேவிட்டென்னிசன், நீா் நிா்வாகம் குறித்து மேம்பாட்டு முகமை இயக்குநா் கஜேந்திரப்பாண்டியன், தென்னையில் மதிப்பு கூட்டும் பொருட்கள் குறித்து விற்பனை மற்றும் வணிகப்பிரிவு துணை இயக்குநா் முருகானந்தம், பயிா் பாதுகாப்பு குறித்து வெங்கடசுப்பிரமணியன், பசுந்தாள் உரப்பயிா் சாகுபடி குறித்து மேம்பாட்டு முகமை இயக்குநா் கேரல்சோனியா மரியம், தென்னையில் உயா் தொழில்நுட்பம் குறித்து தென்னை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ஜோசப்ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.

வேளாண் உதவி இயக்குநா் கனகம்மாள் வரவேற்றாா். வேளாண் துணை அலுவலா் ஷேக்முகைதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT