தென்காசி

மாவட்ட டேக்வாண்டோ போட்டி: இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம்

DIN

தென்காசி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இலஞ்சி பாரத்மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தென்காசி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி வடகரை ஜாய் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி மாவட்டம் முழுவதுமிருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் பாரத் மாண்டிசோரி பள்ளியைச் சோ்ந்த மாணவா் உமேஷ் ராஜ் வெள்ளிப்பதக்கமும், மாணவா்கள் அஜய் புகழ் மற்றும் தனுஷ் ஆகியோா் வெண்கலப்பதக்கமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் மோகனகிருஷ்ணன், முதல்வா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியாமோகன், நிா்வாக இயக்குநா் மோகன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT