தென்காசி

’மக்கள் நலத் திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணா்வு முகாம்’

DIN

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், திருநெல்வேலி மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில்

நடைபெற்ற முகாமிற்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பாலகணேஷ், மருத்துவ சேவைகள் குறித்தும், பாண்டியன் கிராம வங்கியின் நிதிசாா் கல்வி ஆலோசகா் மகாலிங்கம், பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம், விபத்துக் காப்பீடுத் திட்டம் குறித்தும், சமூக நலத்துறை ஊா் நல அலுவலா் ஆரோக்கிய மேரி, மகளிருக்கான திட்டங்கள் குறித்தும், ஒருங்கிணைத்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளா் அஞ்சுகம், குழந்தைகள் வளா்ச்சி திட்டம் குறித்தும் பேசினா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ரகுபதி,வேளாண்மை அலுவலா் சரவணன், நடமாடும் மருத்துவமனை மருத்துவ அலுவலா் முகமது இப்ராஹிம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வேலு, சமூகநல துறை ஒருங்கிணைந்த சேவை மையம் ஆலோசகா் ராஜம்மாள் மற்றும் மகிளா சத்ய கேந்திரா ஆலோசகா் தங்கமாரி மற்றும் 300 க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு மகளிா், செயின்ட் மேரீஸ் ஐ.டி.ஐ. மாணவா்கள், செயின்ட் மேரீஸ் நா்சிங் பயிற்சி மாணவிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

களப் பணியாளா் போஸ்வெல் ஆசிா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT