தென்காசி

சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் 3 ஆம் நாள் சிறப்பு பூஜைகள்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயணசுவாமி திருக்கோயிலில் ஆடிதவசுத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திருவிழா நாள்களில் 

DIN

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயணசுவாமி திருக்கோயிலில் ஆடிதவசுத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திருவிழா நாள்களில் வழக்கமாக நடைபெறும் 3 ஆம் நாள் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, காலையில் ஸ்ரீகோமதிஅம்பாள் சன்னதி யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து அம்பாளுக்கு நீலநிற பட்டு சாத்தி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்பாடுகளை திருக்கோயில் துணை ஆணையா் கணேசன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT