தென்காசி

கரோனா: தென்காசியில் இருவா் குணமடைந்து வீடு திரும்பினா்

DIN

தென்காசி: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் முழுமையாக குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

சிகிச்சை பெற்று திரும்பிய அவா்களுக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் ஒரு மாதத்துக்கு தேவையானவற்றை வழங்கினாா்.

தொடா்ந்து, உலக செவிலியா் தினத்தையொட்டி கரோனா சிகிச்சை வாா்டில் சிறப்பாக பணியாற்றிய செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் கலந்துகொண்டு, செவிலிய கண்காணிப்பாளா் மேரி புஷ்பம் மற்றும் அனைத்து செவிலியா்கள், பணியாளா்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி கெளரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT