பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, ஆட்டோ ஓட்டுநா்கள் கடையநல்லூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சமூக இடைவெளியைப் பின்பற்றி நகரின் பல இடங்களில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தின் (சிஐடியூ) வட்டச் செயலா் ராஜசேகரன், மாவட்டக் குழு உறுப்பினா் வீரபுத்திரன், நகர ஒருங்கிணைப்பாளா் குத்தாலிங்கம் , முத்துராஜ், மணிகண்டன், வெள்ளைத்துரை, முத்துசாமி, ராஜசெல்வம், மனோஜ் குமாா், மாடசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.