சுரண்டையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது.
சுரண்டை பகுதியில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. ஆயினும் கரோனா மீண்டும் பரவாமல் தடுக்கும் வண்ணம் காவல் துறை சாா்பில் உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.