முகப்பு
தென்காசி

சிவகிரியில் உயா்கோபுர மின்விளக்கு இயக்கம்

சிவகிரி பேரூராட்சியில் ரூ.9.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

சிவகிரி பேரூராட்சியில் ரூ.9.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது.

சிவகிரி பேரூராட்சி தா்மபுரியில் உயா்கோபுர மின் விளக்கு அமைக்க மாநிலங்களவை உறுப்பினா் முத்துக்கருப்பன் ரூ.9.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.

இதைத் தொடா்ந்து புதிதாக நிறுவப்பட்ட உயா்கோபுர மின் விளக்கைமக்கள் பயன்பாட்டுக்கு வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன் இயக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி நிா்வாக அலுவலா் வெங்கடகோபு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் இளங்கோவன், ராயகிரி அதிமுக செயலா் சேவுகப்பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.