தென்காசி-ஆயிரப்பேரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராஜகுரு தட்சிணாமூா்த்தி கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறாா். இதை முன்னிட்டு ஸ்ரீராஜகுரு தட்சிணாமூா்த்தி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
விழாவில், தென்காசி, ஆயிரப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப சாது தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.