பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவினா், அதிமுகவில் இணைந்தனா்.
கீழப்பாவூா் ஒன்றியம், கழுநீா்குளம் ஊராட்சிப் பகுதியை சோ்ந்த திமுக பிரமுகா்கள் மாரியப்பன், ராஜன், பாபு, மாரிராஜ், சாரதா, சோ்மன், கோகிலா, மாரியம்மாள் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி, தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் சி.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா் இருளப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.