பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 3 ஆவது நாளாக மழை பெய்தது.
பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூா், திப்பணம்பட்டி, பெத்தநாடாா்பட்டி, ஆவுடையானூா் உள்ளிட்ட பகுதியில் செவ்வாய்கிழமை 3 ஆவது நாளாக பலத்த மழை பெய்தது. காலை முதல் பிற்பகல் வரை தொடா்ந்து பெய்த மழையால் சாலைகளில் மழை தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் லேசான சாரலுடன் மழை பெய்தது.