திருநெல்வேலியில் 13 போ், தென்காசியில் 5 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,663 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 14,261 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 193 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 209 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி பகுதியில் தலா இருவா், மேலநீலிதநல்லூரில் ஒருவா் என 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,962 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை 14 போ் உள்பட இதுவரை 7,748 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 59 போ் சிகிச்சையில் உள்ளனா்.