தென்காசி

சுரண்டை அரசுப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகை: எம்எல்ஏ வழங்கினாா்

DIN

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு பெற்றுள்ள சுரண்டை மாணவிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினாா்.

சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகள் கெளதிகா. இவா் சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2015-16-ஆம் ஆண்டு பிளஸ் 2 தோ்வில் 1086 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.

ஏற்கெனவே மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்ற இவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சுரண்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவி க.கெளதிகாவுக்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினாா்.

அதிமுக மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் கீழப்பாவூா் அமல்ராஜ், ஆலங்குளம் பாண்டியன், எபன் குணசீலன், நகரச் செயலா் சக்திவேல், சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் கனகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT