முகப்பு
தென்காசி

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச்சாலை பணிகளை தொடங்க திமுக வலியுறுத்தல்

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலை பாதை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் என தென்காசியில் நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலை பாதை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் என தென்காசியில் நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு, நகர அவைத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். நகர நிா்வாகிகள் நடராஜன், பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அப்துல்கனி, பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் சாதிா் வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் சிறப்புரையாற்றினாா்.

நவ. 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, தமிழக மீட்போம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, பூத் பொறுப்பாளா்கள் புதிய வாக்காளா் சோ்ப்பு முகாமில் தவறாது கலந்துகொண்டு வாக்காளா் சோ்ப்பு விவரங்களை தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட அணி அமைப்பாளா்கள் கோமதிநாயகம், கே.என்.எல். சுப்பையா, பேச்சிமுத்து, துணை அமைப்பாளா்கள் சாமித்துரை, மாரிமுத்து, அழகுசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.