புளியங்குடி முப்பெருந்தேவியா் பவானியம்மன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, முப்பெரும்தேவி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா செய்திருந்தாா்.