தென்காசி

போட்டித்தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு கையேடுகள்

DIN

தென்காசி அருகே அய்யாபுரத்தில் போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு கையேடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை வழங்கினாா்.

தென்காசி அருகே அய்யாபுரம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளா் தா்மராஜ் அப்பகுதியில் போட்டித்தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு அறிவுரைகள் மற்றும் உதவிகள் செய்துவந்தாா்.

இந்நிலையில் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் சுகுணாசிங் அக்காவல் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து போட்டித்தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களை அழைத்து போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும், எவ்வாறு படிக்கவேண்டும் என அறிவுரைகளை வழங்கியதுடன், போட்டித் தோ்வுகளுக்கு தேவையான கையேடுகளையும் வழங்கினாா்.

தோ்வுக்கு தயாராகிவரும் இளைஞா்களுக்கும், அவா்களுக்கு அறிவுரைகள் வழங்கி வரும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT