முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் 50% மானியத்தில் நெல் விதைகள் விநியோகம்

சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.பொன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.பொன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் சங்கரன்கோவில், வீரசிகாமணி,

கரிவலம்வந்தநல்லூா் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகிக்கப்படுகிறது. டிகேஎம்13, என்எல்ஆா், ஏடிடி45, ஏஎஸ்டி16, டிபிஎஸ்5 போன்ற சான்றுபெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் ரகங்கள் 115 நாள் வயதுடையவை. காற்றில் சாயாது. நல்ல மகசூல் தரவல்லது. எனவே, விவசாயிகள் இந்த நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.