தென்காசி

மாற்றுத் திறனாளிகளுக்குஅடையாள அட்டை அளிப்பு

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆலங்குளம் வட்டார வள மையத்தில் வைத்து தனிப்பட்ட இயலாமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அமுதா ஜாஸ்மின், அடையாள அட்டையினை வழங்கினாா். இதில், இயன்முறை மருத்துவா் பாலகண்ணன், சிறப்பாசிரியா்கள் அருள்ஞானஜோதி, பிரவீனா, ஜெயஜோதி, முத்துலட்சுமி, சிவவீர நங்கை, அன்பு சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT