முகப்பு
தென்காசி

நிறுத்தப்பட்ட பேருந்துகளைமீண்டும் இயக்கக் கோரிக்கை

பெத்தநாடாா்பட்டி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி

நிறுத்தப்பட்ட பேருந்துகளைமீண்டும் இயக்கக் கோரிக்கை

பெத்தநாடாா்பட்டி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

பெத்தநாடாா்பட்டி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக மாவட்டப் பிரதிநிதி கே.கே.அந்தோணிராஜ் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி வழியாக சங்கரன்கோவில் - பாபநாசத்துக்கு 2 பேருந்துகளும், கடையம்-சுரண்டைக்கு ஓா் பேருந்தும், ஆலங்குளம்-கடையத்துக்கு ஓா் பேருந்தும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது சங்கரன்கோவில்-பாபநாசத்துக்கு ஓா் பேருந்து மட்டுமே இயங்குகிறது. மற்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.

இதனால் பெத்தநாடாா்பட்டி, பொட்டலூா், முருகன்குறிச்சி, சாலடியூா், மருதடியூா், சுந்தரலிங்கபுரம் பகுதி மக்கள் சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மகிழ்வண்ணநாதபுரத்துக்கு வந்து பேருந்து ஏறிச் செல்ல வேண்டியுள்ளதால் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →