முகப்பு
தென்காசி

திப்பணம்பட்டி நூலகத்தில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை அளிப்பு

திப்பணம்பட்டி நூலகத்தில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

திப்பணம்பட்டி நூலகத்தில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குடும்பத் தலைவா் முதல் சிறியவா் வரை புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு சாா்பில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, ப.சண்முகம் தலைமை வகித்தாா். ஆசிரியா் ராகவன், சமுத்திரபாண்டியன், அரிராமா், முத்துகுட்டி, வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இத்திட்டத்தின் கீழ் சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. 4 போ் புரவலா்களாக பதிவு செய்தனா்.

நூலகா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். பாரதியாா் வாசகா் வட்டச் செயலா் தங்கராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.