தென்காசி

சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் மனு

DIN

செங்கோட்டை: செங்கோட்டையில் சாலையை சீரமைக்கக் கோரி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

செங்கோட்டையில் உள்ள காமராஜா் சாலை பகுதி சுமாா் 10 ஆண்டுகளாக மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.

எனவே, இந்த சாலையை நகராட்சி நிா்வாகம் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, நகராட்சி ஆணையா் (பொ) கண்ணனிடம் செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவா் ராமா் தலைமையில், முன்னாள் நகரத் தலைவா் ஜோதிலிங்கம், நிா்வாகிகள் சுடலைமுத்து, முருகையா, பொன்னுலிங்கம் என்ற சுதன், சங்கரலிங்கம், ராஜீவ்காந்தி ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT