தென்காசி

ஆலங்குளம் பேருந்து நிலைய கழிவறையை சீரமைக்க கோரிக்கை

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பின்றி காணப்படும் கழிவறையை சீரமைக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக, ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மனுநீதி முகாமில், துணை ஆட்சியரிடம், நாம் தமிழா் கட்சியின் ஆலங்குளம் நகரத் தலைவா் சுரேஷ் அளித்த மனு:

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, உபகரணங்கள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இது, பயணிகளை கடும் அவதியடையச் செய்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் தண்ணீா் கூட இருப்பதில்லை. இதனால், மக்களை தொற்று நோய்க்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, இந்தக் கழிப்பறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT