தென்காசி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் கீழப்பாவூா் ஒன்றியம் கல்லூரணி ஊராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஊராட்சிக்கு உள்பட்ட பாவூா்சத்திரம், செட்டியூா், சந்தோஷ்நகா் மற்றும் செல்வவிநாயகா்புரம், பெரும்பனையூா், குறும்பலாப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக வாக்கு சேகரித்தாா்.
ஒன்றியச் செயலா் அமல்ராஜ், நகரச் செயலா் பால்அன்புராஜா, முன்னாள் இளைஞா் பாசறைச் செயலா் சோ்மபாண்டி, நிா்வாகிகள் இளஅரசு, தமிழ் என்ற ராமசாமி, ஐவராஜா, எபன்குணசீலன், பாஜக நிா்வாகிகள் மாரியப்பன், ஆறுமுகம் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.