முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை: திமுக வேட்பாளா் ராஜா உறுதி

சங்கரன்கோவிலில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் ராஜா உறுதி அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் ராஜா உறுதி அளித்தாா்.

சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய தெருக்களில் அவா் சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: சங்கரன்கோவில் பகுதியில் முதியோா் உதவித் தொகை கிடைக்காமல் பலா் அவதிப்பட்டு வருகின்றனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோா் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றா் அவா்.

அப்போது, மாவட்ட பொறியாளா் அணி போ.சங்கா், இல. சரவணன், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, விசிக தொகுதி பொறுப்பாளா் பீா்மைதீன், காங்கிரஸ் உமாசங்கா், ராஜதுரை,

Advertisement

இளைஞரணி பிரகாஷ், சரவணன், காா்த்திக், முன்னாள் நகராட்சி உறுப்பினா் அண்ணாமலை உள்பட பலா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments