தென்காசி

கடையநல்லூரில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம்

DIN

கடையநல்லூரில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி , வருவாய் ஆய்வாளா் முருகன், காவல் உதவி ஆய்வாளா் முத்து திலகா் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் கடையநல்லூா் மருத்துவமனை பேருந்து நிறுத்தம், கடைவீதி, கிருஷ்ணாபுரம், புதிய பேருந்து நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதித்தனா்.

வட்டாட்சியா் ஆய்வு: இதற்கிடையே கடையநல்லூா் வட்டத்துக்குள்பட்ட கடையநல்லூா், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT