கடையநல்லூா் நகராட்சி சாா்பில் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆணையா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கடைக்கு வருபவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சானிடைசா் உபயோகப்படுத்த வேண்டும். கடைகளில் விழிப்புணா்வு வாசகம் இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
இதில், கடையநல்லூா் நகர வா்த்தகா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் மாரிசாமி, சேகா், நகரமைப்பு அலுவலா் காஜாமைதீன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.