முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் முன்னிலை வகித்தாா்.

ஓட்டுநா்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்; வாகனத்தில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்; 45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments