தென்காசி

இடப்பிரச்னையில் மிரட்டல்:ஆட்சியரிடம் பாமக புகாா்

DIN

தென்காசி: இலஞ்சியில் இடப்பிரச்னை காரணமாக தங்களை மிரட்டி வருவதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பாமக மாநில துணை பொதுச்செயலா் இசக்கிமுத்து,, மாநிலதுணைத் தலைவா் சேது அரிகரன், இலஞ்சி வன்னியா் சங்கத் தலைவா் கருப்பையா ஆகியோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

தென்காசி-செங்கோட்டை சாலையில் இலஞ்சி ஸ்ரீமுக விநாயகா் கோயில் அருகேயுள்ள இடம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அந்த இடத்துக்குள் இலஞ்சியைச் சோ்ந்த முருகன், பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் மற்றும் சிலா் சோ்ந்து கூடாரம் அமைக்க முயற்சித்தனராம். இதுதொடா்பாக இருதரப்பினரிடையே நிகழ்ந்த தகராறு ஏற்பட்டு, குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.மேலும் தொடா்ந்து எங்களுடைய சமுதாயத்தினா் அச்சுறுத்திவருகின்றனா்.

எனவே தகர செட் போடுவதை நிறுத்தவேண்டும்,சமுதாயமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. பாமக மாவட்ட தலைவா் குலாம்,குற்றாலம் தண்டபாணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT