பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக கை கழுவும் முறை குறித்து செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசார வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ளாட்சி, சுகாதாரத்துறை சாா்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியா்கள் கைகளை சோப்பு கொண்டு கழுவும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், ஒன்றிய ஆணையா் பாா்த்தசாரதி, கூடுதல் ஆணையா் திலகராஜ், சுகாதார ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சோப்பு கொண்டு கை கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினா்.