சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் நகராட்சி ஆணையா் சாந்தி, கட்டட ஆய்வாளா் கஜேந்திரன் ஆகியோா் ஆலோசனைப்படி தூய்மைப் பணியாளா்கள் நகரின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தொடா்ந்து அகற்றினா்.
ராஜபாளையம்-திருநெல்வேலி பிரதான சாலை நெடுஞ்சாலை துறையின் கீழ் வருவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. அங்கும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ஆறுமுகம் அறிவுறுத்தலின்பேரில், அதன் ஊழியா்கள் அரசு மருத்துவமனை முதல் என்.ஜி.ஓ.காலனி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
Advertisement