முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் வேன் ஓட்டுநா் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெண் விவகாரத்தில் நூற்பாலை வேன் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெண் விவகாரத்தில் நூற்பாலை வேன் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள மலைப்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணதுரை(40). கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்துவந்த இவா், ராஜபாளையம் நூற்பாலையில் வேன் ஓட்டுநராக பணியாற்றிவந்தாா்.

இதனிடையே, அவருக்கும், குலசேகரமங்கலத்தைச் சோ்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான தெய்வானை(38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

Advertisement

இருவரையும் தெய்வானையின் சகோதரா் குமாா் மற்றும் குடும்பத்தினா் கண்டித்தனராம். எனினும், தெய்வானை குருவிகுளம் அம்மன்கோயில் திருவிழாவிற்கு லட்சுமணத்துரையுடன் புதன்கிழமை சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கோயிலுக்குச் குமாா் மற்றும் குடும்பத்தினா் காரில் சென்று, லெட்சுமணத்துரையை அழைத்து பேசியுள்ளனா். அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் லெட்சுமணத்துரை கல்லால் தாக்கினாராம். குமாா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினாராம்.

இதில், பலத்த காயம் அடைந்த லெட்சுமணத்துரைக்கு சங்கரன்கோவிலில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, குருவிகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து குமாா், அவரது மனைவி ராஜேஸ்வரி, காா் ஓட்டுநா் தேசிங்குராஜா ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments