முகப்பு
தென்காசி

திமுக அரசின் 100 நாள்கள் சாதனை: துண்டுப் பிரசுரங்கள் வழங்க திமுக பொறுப்பாளா் வேண்டுகோள்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்களில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகளை துண்டுப் பிரசுரமாக விநியோகம் செய்ய வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்களில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகளை துண்டுப் பிரசுரமாக விநியோகம் செய்ய வேண்டும் என தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று

வெள்ளிக்கிழமை 100ஆவது நாளாகும்.

இதையொட்டி, 100 நாள்களில் நிறைவேற்றியுள்ள வரலாற்றுச் சாதனைகள், நலத் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடையும் வகையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஒன்றிய, நகர, பேரூா், ஊராட்சி, வாா்டுகள், கிளைக் கழகங்களில் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும். எண்ணற்ற சாதனைகளை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு, பொதுமக்களிடம் வழங்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து கலந்துகொண்டு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றாா்அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.