கடையநல்லூா்: கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசிப் பணியில் சிறப்பாக செயலாற்றிய செவிலியருக்கு சுதந்திர தின விழாவில் சான்று வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 82,344 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 6,095 கோவேக்சின் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.
இப்பணிகளில் சிறப்பாக செயலாற்றிய, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியா் அனுசுயாவுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ச. கோபால சுந்தரராஜ் சுதந்திர தின விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.