தென்காசி

கரோனா தடுப்பூசிப் பணியில்சிறப்பு: செவிலியருக்கு பாராட்டு

DIN

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசிப் பணியில் சிறப்பாக செயலாற்றிய செவிலியருக்கு சுதந்திர தின விழாவில் சான்று வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 82,344 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 6,095 கோவேக்சின் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.

இப்பணிகளில் சிறப்பாக செயலாற்றிய, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியா் அனுசுயாவுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ச. கோபால சுந்தரராஜ் சுதந்திர தின விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT