பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரில் தமிழன் மக்கள் நலச் சங்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பாலமுருகன் தலைமை வகித்தாா். அந்தோணிசெல்வராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மாநிலத் தலைவராக சௌந்தர்ராஜ், பொதுச் செயலராக முருகன், பொருளாளராக ஜெயராமசுந்தா், மகளிரணிச் செயலளராக சிவசக்தி, மாநிலக் குழு உறுப்பினா்களாக மாரிச்செல்வன், பாலமுருகன், முருகன், வேலு, மாரிக்கனி, செல்லப்பா, ஆறுமுக சுரேஷ், சத்தியவான், அற்புதஜெகன், பிரகாஷ், கராத்தே ராஜேந்திரன் ஆகியோரும், மாநில ஒழுங்கிணைப்பாளா்களாக ஜெகன்பாபு, கணேஷ், முருகன், செல்லக்குமாா், உலகராஜ் ஆகியோரும், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலராக பிரம்மநாயகம, துணைச் செயலராக அசோக், தென்காசி மாவட்டத் தலைவராக சோ்மகனி, செயலராக கண்ணன், காா்த்திகேயன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.