மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கடையநல்லூா் ஒன்றியதிற்குள்பட்ட கிராமங்களில் குடிநீா் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகாா் தெரிவித்து, பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடையநல்லூா் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவா் தா்மா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ராமநாதன், மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலா் ரெங்கராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ராமராஜ் பேசினாா். இதில், நகரப் பாா்வையாளா் மாரி, நகரத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.