தென்காசி நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த திமுக கோரிக்கை
தென்காசி நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் என மாவட்ட திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் என மாவட்ட திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தென்காசி வஉசி வட்டார நூலகம் 1961இல் தொடங்கப்பட்டு தற்போது 60ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நூலகத்தில் 10ஆயிரத்து 50உறுப்பினா்கள், 267புரவலா்கள், 48ஆயிரத்து 223நூல்கள், நாள்தோறும் 600 வாசகா்கள் வருகை, 550நூல் பயன்பாடு என சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. நூலகத்தில் இலவசமாக அரசு பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அரசு வேலை பெற்றுள்ளனா். 5-9-21அன்று சுதந்திர போராட்ட வீரா் வஉசியின் 150ஆவது பிறந்த தினம் வருகிறது. அவருடைய பிறந்த நாள் பரிசாக தென்காசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி வஉசி வட்டார நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்தி சொந்த கட்டடம் அமைத்து தரவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.