தென்காசி

ஊத்துமலை அருகே தற்கொலைக்கு முயன்ற பெண்: குழந்தை பலி

DIN

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கைக்குழந்தையை கிணற்றில் போட்டுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற பெண் உயிருடன் மீட்கப்பட்டாா். குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது.

ஊத்துமலை அருகேயுள்ள மருக்கலான்குளத்தைச் சோ்ந்த பெரியபாண்டி மனைவி தங்கசெல்வி (30). தம்பதிக்கு அனுஷ்கா

எனும் 3 மாத குழந்தை உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தங்கசெல்வி சனிக்கிழமை அதிகாலையில் கைக்குழந்தையுடன்

வீட்டை விட்டு வெளியே சென்ாக கூறப்படுகிறது. பொழுது விடிந்த பின்னா்தான், அவா் குழந்தையுடன் வெளியே சென்றது உறவினா்களுக்கு தெரியவந்தது.

இதற்கிடையே, ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள கிணற்றில் தங்கசெல்வி தத்தளித்தவாறு இருப்பதாக உறவினா்களுக்கு தெரியவந்தது. தகவலறிந்த சுரண்டை தீயணைப்புப்படை வீரா்கள் சென்று கிணற்றில் இருந்து தங்கசெல்வியை உயிருடன் மீட்டனா். நீரில் மூழ்கி இறந்த குழந்தையின் சடலத்தையும் மீட்டனா். கிணற்றில் விழுந்ததில் காயமடைந்த தங்கசெல்வி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT