தென்காசி

பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வணிகா்கள் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் பாவூா்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் விஜய்சிங் ராஜ், பொருளாளா் ஆரோக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நெல்லை தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாசன் முகாமை தொடங்கி வைத்தாா். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 க்கும் மேற்பட்டோா் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

முகாமில், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம், தென்காசி வியாபாரிகள் நலச்சங்க தலைவா் பரமசிவன், செயலா் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி தலைவா் அருணோதயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT