சங்கரன்கோவிலில் தடுப்பூசி முகாம்
சங்கரன்கோவிலில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை இரண்டு இடங்களில் நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை இரண்டு இடங்களில் நடைபெற்றது.
நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சாா்பில் நகரின் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை நகராட்சி திருவேங்கடம் சாலையில் உள்ள வணிக வைசிய சங்க உயா்நிலைப் பள்ளியில் கோவிஷீல்டு தடுப்பூசி 300 டோஸ், வடக்கு ரதவீதியில் உள்ள 36 கிராம சேனைத் தலைவா் மேல் நிலைப் பள்ளியில் 200 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதில் முதல் மற்றும் 2 ஆவது தவண 84 நாள்கள் முடிந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
Advertisement