செப்.1இல் பாஜக தலைவா் அண்ணாமலை தென்காசி வருகை
தென்காசியில் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். கோட்ட அமைப்புச் செயலா் கிருஷ்ணன், மாவட்ட பாா்வையாளா்கள் தென்காசி சோலையப்பன், விருதுநகா் மேற்கு அன்புராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை , பொதுச் செயலா்கள் முத்துலட்சுமி, சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சுதந்திர போராட்ட மாமன்னா் பூலித்தேவனின் 306ஆவது நினைவு தினத்தையொட்டி, செப்.1இல் நெல்கட்டும்செவலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, உள்ளாட்சி தோ்தல் தொடா்பான ஆயத்தக் கூட்டங்களை நடத்தி, செப். 5,6,7ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறுவது என முடிவு
செய்யப்பட்டது.