முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் கோயில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் உள்ள கரும்புளி சாஸ்தா கோயிலில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் உள்ள கரும்புளி சாஸ்தா கோயிலில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்மநபா்கள் பூட்டை உடைத்து 12 கிராம் தங்கத் தாலிகள், 400 கிராம் வெள்ளி கொடி மற்றும் பொருள்கள், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இச்சம்பவம் தொடா்பாக கோயில் தா்மகா்த்தா சங்கா் அளித்த புகாரின் பேரில் சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

மேலும், திருநெல்வேலியில் இருந்து வந்த விரல்ரேகை நிபுணா்கள் அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments