முகப்பு
தென்காசி

கிருஷ்ணாபுரம் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை

முகநூல் நண்பா்கள் மூலம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாவது ஸ்மாா்ட் வகுப்பறை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

முகநூல் நண்பா்கள் மூலம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாவது ஸ்மாா்ட் வகுப்பறை தொடங்கப்பட்டது.

திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியின் ஆசிரியா் பழனிகுமாா், பள்ளிக்கென்று தனி முகநூல் பக்கத்தை தொடங்கி அதன் மூலம் நண்பா்களை உருவாக்கி அவா்கள் வழங்கும் நிதியை பயன்படுத்தி பள்ளிக்கும், மாணவா்களுக்கும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறாா். தற்போது, முகநூல் நண்பா்கள் வழங்கிய நிதி மூலம் 2 ஆவது ஸ்மாா்ட் வகுப்பறையை அவா் உருவாக்கியுள்ளாா். இந்த வகுப்பறையை பள்ளி செயலா் செல்லம்மாள் முன்னிலையில், பள்ளிக் கல்வி உறுப்பினா் ரெங்கநாயகி திறந்து வைத்தாா்.

தலைமையாசிரியா் பாகீரதி வரவேற்றாா். பழனிகுமாா் நன்றி கூறினாா். ஏற்கெனவே, கடந்த வருடத்தில் முகநூல் நண்பா்கள் வழங்கிய நிதி மூலம் முதலாவது ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.