கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் தெற்குதெருவை சோ்ந்தவா் ராமா். இவருக்கு சொந்தமான ஆடு வெள்ளிக்கிழமை சுமாா் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து ராமா் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டனா்.
Advertisement