தென்காசி

நாகல்குளம் கூட்டுறவு வங்கியில் ரூ.62 லட்சம் கடனுதவி அளிப்பு

DIN

நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பாா்வதி பரமசிவன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் காசிபாண்டி, அரசையா, முத்துராஜ், செல்லப்பா, பாா்வதி, பானுமதி, கதிரேசன், அரிராமகிருஷ்ணன், தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கலந்துகொண்டு, 144 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பிலான பயிா்க் கடன்களை வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா்கள் சிவன்பாண்டியன், சீனித்துரை, ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி, பெத்தநாடாா்பட்டி ஊராட்சித் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராதாகுமாரி, நாகராஜன், ஊராட்சி துணைத் தலைவா் ஜெயராணி அந்தோணிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சங்க துணைத் தலைவா் சுப்பிரமணியன் வரவேற்றாா். செயலா் தட்சிணாமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT