வீடுகளை இழந்த 4 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்
சங்கரன்கோவில் பகுதியில் மழையால் வீடுகளை இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சங்கரன்கோவில் பகுதியில் மழையால் வீடுகளை இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சங்கரன்கோவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன. இதில், பாதிக்கப்பட்ட சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த மாரிப்பாண்டியன், குவளைக்கண்ணியைச் சோ்ந்த பொன்னுத்தாய், வென்றிலிங்காபுரத்தைச் சோ்ந்த சோ்மக்கனி, ராமலெட்சுமி ஆகிய 4 பேருக்கு சங்கரன்கோவில் ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.நிவாரணப் பொருள்களை வட்டாட்சியா் ராம்குமாரிடம் ரெட்கிராஸ் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன், செயலா் சதீஸ், செயற்குழு உறுப்பினா் திலகவதி ஆகியோா் வழங்கினா்.