முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அரசுப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு அடிப்படை வசதிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ, இதுகுறித்து தலைமையாசிரியா் கிறிஸ்டல் மேரியிடம் கேட்டறிந்தாா். அப்போது, பள்ளி முன்பாக புதுப்பட்டி செல்லும் சாலையை பள்ளிக்கு கீழ்புறம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் பள்ளிக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நகர அதிமுக செயலா் கே.பி. சுப்பிரமணியன், எம்ஜிஆா் மன்றப் பொருளாளா் சாலமோன் ராஜா, வேலு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.