முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில்உழவா் உற்பத்தியாளா் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம்

சங்கரன்கோவிலில் அமிா்தம் ஹை - டெக் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் அமிா்தம் ஹை - டெக் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் வேளாண் இணை இயக்குநா் நல்லமுத்து ராஜா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநா் கிருஷ்ணகுமாா் தொடக்கி வைத்தாா். வேளாண்மை அலுவலா் முத்துகுமாா், நிறுவனத்தின் தலைவா் கணேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரிமுத்து, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் இசக்கியம்மாள் மற்றும் 400 க்கு மேற்பட்ட விவசாய பங்குதாரா்கள் கலந்துகொண்டனா்.

தமிழ் நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம் 2020-2021இன் கீழ் சங்கரன்கோவில் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 500 விவசாயிகளை பங்குதாரா்களாக கொண்டு இந்நிறுவனம் கடந்த 2020 டிசம்பரில் தொடங்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments